கிழிந்த சட்டை, இல்லாவிட்டால் கருப்பு சட்டை: இதுதானே ஸ்டாலினின் பழக்கம்- தமிழிசை தாக்கு
கிழிந்த சட்டை இல்லாவிட்டால் கருப்பு சட்டையுடன் சட்டசபைக்கு செல்வதுதானே ஸ்டாலினின் பழக்கமாக உள்ளது என்று தமிழிசை விமர்சனம் செய்தார்.
சென்னை: கிழிந்த சட்டையோ அல்லது கருப்பு சட்டையோ அணிந்து கொண்டு சட்டசபைக்கு செல்வதுதானே ஸ்டாலினின் பழக்கமாக இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இன்று 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்தபடி சட்டபைக்கு வந்தனர்.
இதனிடையே மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை டிடிவி தினகரன் தொடங்கிவைத்தார். இதுகுறித்து தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் தினகரன் தொடங்கிய அமைப்பு எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கிழிந்த சட்டை இல்லாவிட்டால் கருப்பு சட்டையுடன் சட்டசபைக்கு செல்வதே ஸ்டாலினின் பழக்கமாக இருக்கிறது.
உருப்படியாக எதையும் செய்யாத ஸ்டாலின் சட்டை செய்ய தேவையில்லை என்றார் தமிழிசை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டு வந்தது. அப்போது அங்கு நடந்த தள்ளுமுள்ளுவில் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது. இதைதான் தமிழிசை தற்போது நினைவுப்படுத்தியுள்ளார்.