பேருந்தில் செல்வதற்காகவே வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது- தமிழிசை
பேருந்தில் செல்வதற்காகவே வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை: வேலைக்கு செல்வதற்காக பேருந்தில் சென்ற காலம் போய், பேருந்தில் செல்வதற்காகவே வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தில் அனைத்து பேருந்துகளின் கட்டணத்தையும் தமிழக அரசு உயர்த்திவிட்டது. எரிப்பொருள் விலையேற்றம், ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி இந்த பேருந்து கட்டண உயர்வு செய்யப்பட்டதாக அரசு கூறியது.
எனினும் இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சியினரும் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என கட்சியனர் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், வேலைக்கு செல்வதற்காக பேருந்தில் சென்ற காலம் போய், பேருந்தில் செல்வதற்காகவே வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்றார்.