இன்று சூரப்பாவை எதிர்க்கும் சூப்பர் ஸ்டாரே! அன்று உங்களை தமிழக மக்கள் எதிர்த்திருந்தால்... தமிழிசை
காவிரி நீரை கொண்டு வர தாமதம் ஏற்படும் என்பதால் ஸ்டாலின் சிறையிலேயே இருக்கட்டும் என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்ட சூரப்பாவை எதிர்க்கும் ரஜினியை அன்று தமிழக மக்கள் எதிர்த்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று பாஜக தேசிய தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 5-ஆம் தேதி திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டன.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்டாலின் காவிரி மீட்பு உரிமை நடைபயணத்தை தொடங்கி வைத்தார். நேற்று தஞ்சையில் பேசிய ஸ்டாலின், காவிரி கிடைக்க வேண்டும் என்றால் விவசாயிகளுக்காக நாங்கள் வாழ்நாள் முழுவதும் சிறைக்கு செல்ல தயார் என்று கூறியிருந்தார்.

பாஜகதான்
இதுகுறித்து சென்னையில் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில் காவிரி விவகாரத்தில் துரோகம் செய்துவிட்டுதான் ஸ்டாலின் கைதானார், தியாகம் செய்துவிட்டு கைதாகவில்லை. திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்துக்கு கொண்டு வர முடியாத காவிரியை பாஜகதான் கொண்டு வரும்.

சிறையில் இருங்கள்
காவிரியை கொண்டுவர கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே ஸ்டாலின் அதுவரை சிறையில் இருக்க வேண்டும். இத்தனை ஆர்ப்பாட்டம் , போராட்டம் , நடைபயணம் நடத்தும் ஸ்டாலின், தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்று கூறும் சித்தராமையாவை கண்டித்து பேசியதுண்டா. தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகிறார் ஸ்டாலின்.

ரஜினிகாந்த் கருத்து
துணைவேந்தர் பதவிக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பிக்கலாம் என அதிமுக அரசு கொண்டுவந்த சட்டத்தின்படியே துணைவேந்தர் சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் எந்த முறைகேடும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமனம் செய்தது சரி அல்ல என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சத்யராஜுக்கு கண்டனம்
40 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள், கர்நாடகாவை சேர்ந்தவரை நடிகராக ஏற்க மாட்டோம் என நினைந்திருந்தால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியுமா? ராணுவமே வந்தாலும் பயப்படமாட்டோம் என்று காவிரி போராட்டத்தில் சத்யராஜ் கூறுகிறார். ஐடி ரெய்டு வந்தால் சத்யராஜ் எப்படி பயப்படுவார் என தெரியும் என்றார் தமிழிசை.












Click it and Unblock the Notifications