ஆண்டாளின் புகழ்பாட நினைத்து இகழ் பாடியதுதான் தவறு.. சொல்கிறார் தமிழிசை!
ஆண்டாளின் புகழ்பாட நினைத்து இகழ் பாடியதுதான் என மக்கள் கூறுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஆண்டாளின் புகழ்பாட நினைத்து இகழ் பாடியதுதான் என மக்கள் கூறுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
ஆண்டாள் குறித்து எழுந்த சர்ச்சை பற்றி கவிஞர் வைரமுத்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டார். அதில் தான் கூறிய கருத்து திரித்து வெளியிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மேலும் ஆண்டாளின் புகழ்பாட நினைத்தது தவறா என்றும் வைரமுத்து கேள்வி எழுப்பியிருந்தார். வைரமுத்துவின் விளக்கம் குறித்து பாஜகவைச் சேர்ந்த எஸ்வி சேகர் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார்.

தமிழிசை கருத்து
அப்போது வைரமுத்து மன்னிப்பு கேட்டால் என்ன தவறு அவர் காசுக்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவார் என கூறியிருந்தார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
|
இகழ் பாடியதுதான் தவறு
அதில் ஆண்டாளின் புகழ்பாட நினைத்தது தவறா? எனக்கேட்கிறார் கவிஞர் வைரமுத்து என்ற தமிழிசை ஆண்டாளின் புகழ்பாட நினைத்து இகழ் பாடியதுதான் தவறு என்கின்றனர் மக்கள் என தெரிவித்துள்ளார்.
|
எவ்வளவு வருத்தமளிக்கும்?
எதிர்சொல் மூன்றுமாதம் ஆராய்ந்தவருக்கே வருத்தமளிக்கிறது என்றால், பழி சொல் பிறவியிலிருந்தே அவளை ஆராதிப்பவர்களுக்கு எவ்வளவு வருத்தமளிக்கும்? என்றும் தமிழிசை தனது டிவிட்டில் கேட்டுள்ளார்.
|
எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்வு
மேலும் பேருந்துக்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது குறித்தும் தமிழிசை டிவிட்டியுள்ளார். அதில் பேருந்துக் கட்டணத்தை ஏற்றியிருப்பது அரசின் நிதிப்பற்றாக் குறையினால் என்கிறார் அமைச்சர் என்று கூறியுள்ள அவர், எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்டபோது நிதிப்பற்றாக்குறை இல்லையா?












Click it and Unblock the Notifications