விவசாயிகள் மகிழ்ச்சி... மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார் முதல்வர் பழனிச்சாமி
காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தருமபுரி: காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
நாடு முழுக்க தற்போது பல மாநிலங்கள் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மழை காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவும், கேரளாவும் இந்த மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 4 நாட்களாக மிக அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது.
முக்கியமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் காவிரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகமாகிக் கொண்டே சென்றது. நேற்று அதிகாலை காவிரியில் 1.70 லட்சம் கனஅடியாகதான் நீர் வரத்து இருந்தது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதன்பின்தான் அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில் நேற்று இரவு நீர்வரத்து 2.95 லட்சம் கனஅடியாக உயர்ந்தது. தற்போது காவிரியில் நீர் வரத்து 2.53 லட்சம் கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 69.96 டி.எம்.சியாகவும் உள்ளது.

இந்த நிலையில் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அமைச்சர்கள், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications