சொந்த ஊரான சேலத்துக்கு மார்ச் 11-ல் செல்கிறார் முதல்வர் எடப்பாடி?
தமிழக முதல்வராக பதவியேற்றபின் முதல் முறையாக எடப்பாடி பழனிச்சாமி வருகிற 11ம் தேதி சேலத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவிற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சேலம்: தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக எடப்பாடி பழனிச்சாமி வருகிற 11-ந் தேதி சேலத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளையொட்டி, சேலம் போஸ் மைதானத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை பிராம்மாண்டமாக நடத்த சேலம் மாவட்ட அதிமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட அதிமுக செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வெங்கடாச்சலம் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர்.

அப்போது வெங்கடாச்சலம் கூறியதாவது :
ஜெயல்லிதாவின் 69-வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதன்முதலாக தனது சொந்த ஊரான சேலத்திற்கு வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம். விழாவினை பிரம்மாண்டமாக நடந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் விழா நடைபெறும் நாள் இன்னும் முடிவாகவில்லை என்று வெங்கடாச்சலம் கூறினார்.












Click it and Unblock the Notifications