துறையூர் வெடிவிபத்து... பலியான 19 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3.5 லட்சம் நிவாரணம்!
துறையூர் வெடிவிபத்தில் உயிரிழந்த 19 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, தமிழக அரசு தலா ரூ. 3.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
திருச்சி: துறையூர் வெடிவிபத்தில் உயிரிழந்த 19 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 3.5 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தளுகை முருங்கப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இதில் கடந்த வியாழனன்று ஏற்பட்ட வெடிவிபத்தில், 19 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த வழக்கை முதலில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், தற்போது இது சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டுள்ளது. இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்த 4 பேருக்கு ரூ.50 ஆயிரமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
இந்தத் தொகையை துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, அமைச்சர்கள் இன்று வழங்குகின்றனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications