தமிழக அரசு சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.. சர்டிபிகேட் கொடுக்கும் சசி கணவர் நடராஜன்!
தமிழக அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட நாளிலேயே அடுத்த கட்சியின் அடுத்த தலைமைக் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் சசிகலாவின் கணவர் நடராஜன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு குடும்ப அரசியல் செய்வோம், எங்களால் தான் ஜெயலலிதா அரசியலில் இருந்தார் என்பது உள்ளிட்ட கருத்துக்களை கூறி சர்ச்சையை கிளப்பினார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவரும் புதியபார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது உடல் நலம் தேறிய நிலையில் நடராஜன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

தன்னிச்சையாக செயல்படவில்லை
அப்போது பேசிய அவர், அமைச்சர்கள் தன்னிச்சையாக செயல்படவில்லை எனக் கூறியுள்ளார். அவர்கள் கலந்தாலோசித்தே செயல்படுவதாக நடராஜன் கூறியுள்ளார்.

அதிகாரிகளை மாற்ற வேண்டும்
மேலும் நீண்ட காலம் ஒரே இடத்தில் இருக்கும் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்றும் நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். அதிகாரிகளை மாற்றுவதன் மூலம் பணிகள் விரைந்து நடக்கும் என்றும் கூறினார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை
தமிழகத்தில் சிறப்பான நிர்வாகம் இருப்பதால்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை என்றும் அவர் கூறினார். மத்திய அரசு மாநிலத்துக்கான மானியத்தை நிறுத்தி விட்டதாகவும் அவர் கூறினார்.

சுதந்திரமாக செயல்படுகின்றனர்
அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படுவதாகவும் சசிகலாவின் கணவர் நடராஜன் தெரிவித்தார். இருப்பினும் ஜெயலலிதாவின் கண் அசைவு இல்லாததால் அமைச்சர்கள் ரிலாக்ஸாக செயல்படுவதாகும் அவர் நடராஜன் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications