தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
தமிழக அரசு இன்று 16 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழக அரசு இன்று 16 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம்:
1. தமிழ்நாடு போக்குவரத்து காவல் துறை ஏடிஜிபி சிறப்பு அதிகாரியாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ் சென்னையில் காலியாக இருந்த சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு ஏடிஜிபியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2. ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாம் ஏடிஜிபி சிறப்பு அதிகாரியாக இருந்த சு.அருணாசலம் தமிழ்நாடு போக்குவரத்து காவல் துறை ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. காவல் பயிற்சி ஐஜியாக இருந்த பி.நாகராஜன் சென்னை வடக்கு மண்டலத்துக்கு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4. சென்னை வடக்கு மண்டல ஐஜியாக இருந்த சி.ஸ்ரீதர் சென்னை கிரைம் சிஐடி பிரிவு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5. சென்னை கிரைம் சிஐடி பிரிவு ஐஜியாக இருந்த மகேஷ் குமார் அகர்வால் தெற்கு, கிரேட்டர் சென்னை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனராகவும் ஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
6. தெற்கு, கிரேட்டர் சென்னை சட்டம் ஒழுங்கு பிரிவு ஐஜியாக இருந்த டாக்டர் எம்.சி.சாரங்கன் மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
7. டிஜிபி அலுவலகத்தில் ஸ்தாபன ஐஜியாக இருந்த டாக்டர் ஆர்.தினகரன் வடக்கு மற்றும் கிரேட்டர் சென்னையின் சட்டம் ஒழுங்கு பிரிவு ஐஜி மற்றும் கூடுதல் போலீஸ் கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8. வடக்கு கிரேட்டர் சென்னையின் சட்டம் ஒழுங்கு பிரிவு ஐஜி மற்றும் கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த எச்.எம்.ஜெயராம் டிஜிபி அலுவலக ஸ்தாபனத்தின் ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
9. குற்ற ஆவணக் காப்பகத்தில் ஐஜியாக இருந்த சுமித் சரண் சென்னை அமலாக்கத்துறையில் காலியாக இருந்த ஐஜி பதவிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
10. சென்னை மேற்குப் பகுதி லஞ்ச ஒழிப்பு மற்று கண்காணிப்புத் துறை எஸ்பி எச்.ஜெயலட்சுமி சென்னை பொருளாதார குற்ற விசாரணை பிரிவு சிஐடி எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
11. சேலம் மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப் பிரிவு துணை போலீஸ் கமிஷனராக இருந்த பி.தங்கதுரை சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
12. சேலம் நாகர சட்டம் ஒழுங்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனராக இருந்த ஜி.சுப்புலட்சுமி சென்னையில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
13. சென்னையில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை ஐஜியாக இருந்த எம்.விஜயலட்சுமி சென்னை தமிழ்நாடு அதிரடிப்படை பிரிவு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
14. சென்னையில் தமிழ்நாடு அதிரடிப்படை பிரிவு எஸ்பியாக இருந்த பி.ஆர்.வெண்மதி சென்னை ஆவடி ரெஜிமண்ட்டல் செண்டர் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் கம்மாண்ட்டண்ட் ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
15. தமிழ்நாடு சிறப்பு போலீஸ் ஆவடி ரெஜிமண்ட்டல் செண்டர் கம்மாண்டண்ட் வந்திதா பாண்டே மத்திய குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
16. மத்திய குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு எஸ்பியாக இருந்த ஷியாமலா தேவி சேலம் மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப் பிரிவு துணை போலீஸ் கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.