தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை கைது செய்யத் திட்டம்?
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எல்எல்ஏக்கள் பலரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எல்எல்ஏக்கள் 18 பேரில் பலரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்ற எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். எம்எல்ஏக்கள் கூண்டோடு தகுதி நீக்கம் செய்யப்படுவது தமிழக சட்டசபை வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை எனக் கூறப்படுகிறது.
சபாநாயகரின் எம்எல்ஏக்கள் தகுதிநீக்க நடவடிக்கை ஜனநாயக படுகொலை என திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பழனியப்பனிடம் விசாரணை
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்எல்ஏக்களில் பலரை கைது செய்ய தமிழக போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாமக்கல் ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் மர்ம மரண வழக்கில் எம்எல்ஏ பழனியப்பனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Recommended Video


செந்தில் பாலாஜியை கைதுசெய்ய திட்டம்
இந்த வழக்கில் எம்எல்ஏ பழனியப்பனை விரைவில் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பணமோசடி செய்ததாக வழக்கு
மோசடி வழக்கில் செந்தில்பாலாஜியை கைது செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் பணம் மோடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிபிசிஐடி போலீசார் திட்டம்
இந்த வழக்கில் செந்தில்பாலாஜியை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் கர்நாடக மாநிலத்துக்கு சென்றுள்ளனர். செந்தில் பாலாஜி கர்நாடகாவில் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications