புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை.. தமிழக சிறைகளின் கண்காணிப்பாளர்கள் அதிரடி இடமாற்றம்!
சென்னை: புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகைப்பட ஆதாரங்கள் வெளியானதை தொடர்ந்து தமிழக சிறைகளின் கண்காணிப்பாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானை சேர்ந்த நபர் உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள புழல் சிறையில் 18 டிவிகளும் 2 எப் எம் ரேடியோக்களும் கைப்பற்றப்பட்டன. சிறை விதிகளை மீறி இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், சிம் கார்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சீருடை இல்லாமல் சாதாரண உடை அணிந்த படி பாகிஸ்தான் கைதி சுற்றித் திரியும் புகைப்படங்களும் சொகுசு வசதிகளுடன் நட்சத்திர ஓட்டல் உணவுகள் அவரது அறையில் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இடமாற்றம்
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா 8 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

புழல் சிறை வார்டன்கள்
புழல் மத்திய சிறையின் முதன்மை தலைமை வார்டன்கள் விஜயராஜ் ஊட்டிக்கும், கணேசன் செங்கத்துக்கும், வார்டன்கள் பாவாடைராயர், செல்வகுமார் ஆகியோர் வேலூர் மத்திய சிறைக்கும், ஜெபஸ்டீன் செல்வகுமார், பிரதாப் சிங் ஆகியோர் கோவை மத்திய சிறைக்கும், சிங்காரவேலன் சேலம் மத்திய சிறைக்கும், சுப்பிரமணி திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உடனடியாக தங்களுக்கு மாற்றப்பட்டுள்ள இடத்தில் பணியில் சேரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழக அரசு உத்தரவு
இதைத் தொடர்ந்து பாளை, மதுரை ஆகிய சிறைகளிலும் போலீஸார் கைதிகளிடம் தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்நிலையில் புழல் சிறையின் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புழல் சிறைக்கு மாற்றம்
இதன்படி, புழல் முதல் சிறையின் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறை மற்றும் சீர்திருத்தப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பணியிட மாற்றம்
சேலம் சிறை கண்காணிப்பாளரான ஆண்டாள், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். திருச்சி சிறை கண்காணிப்பாளரான நிகிலா நாகேந்திரன், கடலூர் மத்திய சிறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி சிறை
அதேநேரம், கோவை சிறை கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பதவிஉயர்வு பெற்று, கோவை சிறையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், திருச்சி சிறை கூடுதல் கண்காணிப்பாளர் முருகேசனுக்கு பதவிஉயர்வு வழங்கப்பட்டு, திருச்சி சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications