புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை.. தமிழக சிறைகளின் கண்காணிப்பாளர்கள் அதிரடி இடமாற்றம்!
சென்னை: புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக புகைப்பட ஆதாரங்கள் வெளியானதை தொடர்ந்து தமிழக சிறைகளின் கண்காணிப்பாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானை சேர்ந்த நபர் உள்ளிட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள புழல் சிறையில் 18 டிவிகளும் 2 எப் எம் ரேடியோக்களும் கைப்பற்றப்பட்டன. சிறை விதிகளை மீறி இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், சிம் கார்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் சீருடை இல்லாமல் சாதாரண உடை அணிந்த படி பாகிஸ்தான் கைதி சுற்றித் திரியும் புகைப்படங்களும் சொகுசு வசதிகளுடன் நட்சத்திர ஓட்டல் உணவுகள் அவரது அறையில் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இடமாற்றம்
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா 8 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

புழல் சிறை வார்டன்கள்
புழல் மத்திய சிறையின் முதன்மை தலைமை வார்டன்கள் விஜயராஜ் ஊட்டிக்கும், கணேசன் செங்கத்துக்கும், வார்டன்கள் பாவாடைராயர், செல்வகுமார் ஆகியோர் வேலூர் மத்திய சிறைக்கும், ஜெபஸ்டீன் செல்வகுமார், பிரதாப் சிங் ஆகியோர் கோவை மத்திய சிறைக்கும், சிங்காரவேலன் சேலம் மத்திய சிறைக்கும், சுப்பிரமணி திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உடனடியாக தங்களுக்கு மாற்றப்பட்டுள்ள இடத்தில் பணியில் சேரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழக அரசு உத்தரவு
இதைத் தொடர்ந்து பாளை, மதுரை ஆகிய சிறைகளிலும் போலீஸார் கைதிகளிடம் தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்நிலையில் புழல் சிறையின் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புழல் சிறைக்கு மாற்றம்
இதன்படி, புழல் முதல் சிறையின் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட சிறை மற்றும் சீர்திருத்தப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பணியிட மாற்றம்
சேலம் சிறை கண்காணிப்பாளரான ஆண்டாள், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். திருச்சி சிறை கண்காணிப்பாளரான நிகிலா நாகேந்திரன், கடலூர் மத்திய சிறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி சிறை
அதேநேரம், கோவை சிறை கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பதவிஉயர்வு பெற்று, கோவை சிறையின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், திருச்சி சிறை கூடுதல் கண்காணிப்பாளர் முருகேசனுக்கு பதவிஉயர்வு வழங்கப்பட்டு, திருச்சி சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications