வளிமண்டல மேலடுக்கில் காற்றழுத்த தாழ்வுநிலை.. தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!
வளிமண்டல மேலடுக்கில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக அவ்வப்போது பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பமும் ஓரளவுக்கு தணிந்து பகல் நேரங்களில் விட்டு விட்டு மேகம் மூட்டம் காணப்படுகிறது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் வெப்பசலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications