தேசிய நெடுஞ்சாலையில் டோல் கேட்டை உடைத்து போராட்டம்.. வாழ்வுரிமைக் கட்சியினர் கைது
புதுக்கோட்டை அருகே சுங்கச் சாவடியை உடைத்த வாழ்வுரிமைக் கட்சித் தொண்டர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: தஞ்சை- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வரும் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொண்டர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த சாலையில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை புது நகரில் வரி வசூலுக்காக சுங்கச் சாவடி (லோட்கேட்) அமைக்கட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் சிறீதர் தலைமையில் அக்கட்சித் தொண்டர்கள் அங்கு சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினார்கள். இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த கந்தர்வகோட்டை போலீசார் சுங்கச் சாவடியை அடித்து உடைத்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் 15 பிரமுகர்களை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications