"தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு!" தச்சங்குறிச்சியில் தொடங்கியது.. சீறி பாயும் காளைகள்!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜன. மாதம் மாதம். இடையில் சில ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட போதிலும், பிறகு 2017 முதல் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

Taminadus first Jallikattu to happen in Pudukkottai thachankurichi today

அதன்படி 2024ஆம் ஆண்டிற்கான முதல் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறுகிறது. இதில் சுமார் 700 காளைகள் பங்கேற்க உள்ளன.

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் நடந்தாலும் கூட தமிழ்நாட்டிலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் நடக்கிறது. அதன்படி இன்று இந்தாண்டின் முதல் போட்டி இன்று தச்சங்குறிச்சியில் நடக்கிறது. புதுக்கோட்டை கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக வாடிவாசல், கேலரி, மேடை, இரும்பு தடுப்புகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு நடத்தப்பட்டுள்ளது. காரைக்குடி, திருப்பத்தூர், திண்டுக்கல், தஞ்சாவூர், தேவகோட்டை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் இதில் கலந்து கொள்ள உள்ளன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 746 காளைகள் பங்கேற்றுள்ளன.

அதேபோல காளைகளைப் பிடிக்கப் 297 காளையர்கள் இதில் களமிறங்க உள்ளனர். வழக்கம் போல இந்தாண்டும் பேட்ச் பேட்ச்சாகவே காளையர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் வெல்லும் காளைகளுக்கும், அதை அடக்கும் வீரர்களுக்கும் பைக், கட்டில், பீரோ, ரொக்க பரிசுகளும் வழங்கப்பட இருக்கிறது. அரசு விதிமுறைகள் படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளது.

போட்டி தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். கோட்டாசியர் உறுதிமொழியை வாசிக்க அதை மாடுபிடி வீரர்கள் ஏற்றுக்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரைக் கடந்தாண்டு அங்கே 48 இடங்களில் ஜல்லிக்கட்டும், 7 இடங்களில் மஞ்சுவிரட்டும், 17 இடங்களில் வடமாடு மஞ்சுவிரட்டும் நடைபெற்றது. இந்தாண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+