பேச்சுவார்த்தை தோல்வி- வரும் 15-ல் போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் உறுதி- சிஐடியு சௌந்தரராஜன்
முன் கூட்டியே திட்டமிட்டிருந்தபடி வரும் 15ம் தேதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகப் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் வரும் 15-ந் தேதி திட்டமிட்டபடி போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு அரசு வழங்கவேண்டிய நிலுவை தொகைக்கென,அரசு ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி போதாது எனவும் கூறியுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து தமிழக அரசு உடனே ரூ.2,000 கோடி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பேட்டியளித்த சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சௌந்திரராஜன் கூறுகையில், தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை வழங்கிய பிறகு ஊதிய உயர்வு பேச்சை தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டப்படி 15 ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும். வேலை நிறுத்தத்தை கைவிட அரசு சார்பில் எந்த உறுதியும் அளிக்கவில்லை. தமிழகத்தில் ஓடும் பேருந்துகளில் பாதி காலாவதியானவை. 22 ஆயிரம் அரசு பேருந்துகளில் 17 ஆயிரம் பேருந்துகள் ஓடத் தகுதியற்றவை' என்று தெரிவித்தார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications