சிவாஜி கணேசன் பரிசளித்த தஞ்சை பெரிய கோவில் யானை மரணம்
தஞ்சாவூர்: நடிகர் சிவாஜிகணேசன் தஞ்சை பெரிய கோயிலுக்கு தானமாக வழங்கிய யானை வெள்ளையம்மாள் உடல் நலமின்றி இன்று காலை உயிரிழந்தது.
தஞ்சை பெரிய கோவில் பெண் யானை வெள்ளையம்மாள், 63, வயது. வயதாவிட்டதால் கடந்த 8 ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தது. இதனால் யானைக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இதனால் படுத்தப்படுக்கையாக இருந்தது. கால்நடை மருத்துவர்கள், கோயில் யானைக்கு தொடர்ந்து அளித்த சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி யானை வெள்ளையம்மாள் இன்று காலை உயிரிழந்தது.
தஞ்சை பெரியகோவிலுக்கும், திருவானைக்கால் கோவிலுக்கும் நடிகர் சிவாஜிகணேசன் இரண்டு பெண் யானைகளை தானமாக வழங்கினார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு திருவானைக்கால் கோவில் யானை சாந்தி உயிரிழந்தது. இப்போது வெள்ளையம்மாள் என்ற யானை மரணமடைந்து விட்டது.
பாகன் சஸ்பெண்ட்
யானை வெள்ளையம்மாளை பிச்சை எடுக்க வைப்பதாக இந்து அறநிலைய துறைக்கு புகார் வந்ததை அடுத்து கடந்த மாதம் யானை துணை பாகன் சாரங்கனை சஸ்பெண்ட் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.