தீவிரமடையும் மதுவிலக்கு போராட்டம்- டாஸ்மாக் கடைகளில் கேமரா பொருத்த அரசு முடிவு
நெல்லை: மதுக் கடைகளை மூடக் கோரி போரட்டம் வலுத்து வருவதால் டாஸ்மாக் கடைகளில் கேமரா பொருத்த அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அடிமையாகி வருகின்றனர்.

இதனால் பல இடங்களில் சடடம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு காந்தியவாதி சசிபெருமாள் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி பலியானார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி நாவனூரில் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசியதில் கடை ஊழியர் செல்வம் உயிரிழந்தார். இதையடுத்து டாஸ்மாக் கடைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு கருதி சி.சி.டி.வி கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக மண்டல மேலாளர்கள் தலைமையில் மாவட்ட மேலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த டாஸ்மாக் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மதுரை மண்டல சுமார் 1500 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க தேவைப்படும் கேமராக்கள் குறித்து மண்டல அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில கடைகளில் முன்னோட்டமாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications