அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலம்.. 8 கிராமங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடாக அலங்காநல்லூர் சுற்றியுள்ள 8 கிராமங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
அலங்காநல்லூர்: 2 ஆண்டுகளுக்கு பிறகு அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 8 கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
மாணவர்களின் புரட்சிப் போராட்டத்திற்கு பின்னர் இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதனைக் கண்டு களிக்க ஏராளமான மக்கள் அவனியாபுரத்தில் குவிந்துள்ளனர். மாடு பிடி வீரர்கள், பார்வையிடும் மக்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதே போன்று, இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியையொட்டி, அலங்காநல்லூரை சுற்றியுள்ள 8 கிராமங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மொத்தமாக மூடப்பட்டுள்ளன. முன்னதாக, டாஸ்மாக் கடைகள் மூடுவதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.