டாஸ்மாக் கடையை உடைத்து 1.18 லட்சம் கொள்ளை – காலி பாட்டில்களை வெளியில் வீசிச் சென்ற கொள்ளையர்கள்

தலைவாசல் அருகே அமைந்துள்ளது சிறுவாச்சூர் கிராமம். இங்கு அரசின் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் சேல்ஸ்மேன் பாண்டியன், சூப்பர்வைஸர் ராஜா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கடையை பூட்டி விட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்த 1.18 லட்சம் ரூபாயை டிராவினுள் வைத்து சென்றுள்ளனர்.
நள்ளிரவில் கடைக்குள் புகுந்த மர்ம கும்பல் கடப்பாரை கம்பியால் கடையை உடைத்து கடையினுள் இருந்த 1.18 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
மேலும் மது பாட்டில்களை எடுத்து சென்று கடையின் வெளியே குடித்து விட்டு பாட்டில்களை வீசி சென்றுள்ளனர். நேற்று காலை 6 மணியளவில் டாஸ்மாக் கடை உடைந்திருப்பது குறித்து அப்பகுதி மக்கள் தலைவாசல் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த ஆத்தூர் போலீஸார் கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு செய்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் பற்றி போலீசார் மேலும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications