பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்காக மக்கள் வரிப் பணத்தை வீணாக செலவழிக்கலாமா?: கருணாநிதி
சென்னை: பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனைக்கு தமிழக மக்கள் வரிப் பணம் வீணாக செலவழிக்கபடலாமா என முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''புதிய சட்டப்பேரவைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்காக ஏற்கனவே, 102.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேலும் பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனைக்கு அரசு 6.86 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. கட்டத்தை மாற்றுவதற்காக இவ்வளவு பணம் செலவு செய்வதற்குப் பதில் புதிய கட்டடமே கட்டியிருக்கலாம். தமிழக மக்கள் வரிப் பணத்தை இப்படி வீணாக செலவழிக்கப்படலாமா?'' எனக் கூறியுள்ளார்.
மேலும், ''சென்னையில் 2 மாதங்களுக்கு முன்பே கொசு ஒழிப்பு பணியை செய்திருக்க வேண்டும். அப்படி செய்ய தவறியதால் தற்போது கொசுக்கள் அதிகமா பெருகி விட்டது'' எனவும் அந்த அறிக்கையில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications