வடமாநில தொழிலாளியை கொன்ற புலியை பிடிக்க 5 கூண்டுகள்... கூடலூரில் தேடுதல் வேட்டை
நீலகிரி: கூடலூர் அருகே, புலி தாக்கியதில் வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. புலியை பிடிக்க 5 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆங்காங்கே கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேவர்சோலை பகுதியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மகு என்பவர் குடும்பத்தினருடன் தங்கி பணியாற்றி வருகிறார். நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர், காலை வரை திரும்பாததால் அவரை உறவினர்கள் தேடியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை, தேயிலை தோட்டம் அருகேயுள்ள ஏலத்தோட்டத்தில் மகுவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த பகுதியில் புலி ஒன்று நடமாடி வருவதாகவும், ஏற்கனவே 10 மாடுகளை அது கொன்றுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால், மகுவையும் புலியே அடித்து கொன்றுள்ளதாகவும் அவர்கள் சந்தேகம் எழுப்பினர். அதை தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய ஆய்வில், புலி தாக்கியதில் மகு உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
தற்போது, புலியை கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், அதிரடிப்படை வீரர்களும், பாதுகாப்பிற்காக காவல்துறையினரும் தேவர்சோலை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
புலியை பிடிக்க ஆங்காங்கே கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 5 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications