மத்திய அரசுக்கு இணையாக ஊதிய உயர்வு-ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி வரும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் இன்றும் நீடிக்கிறது.
திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களிலும் சேர்ந்து நேற்று 9 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை கல்வி துறை அதிகாரிகளிடம் இருந்து வந்த உத்தரவில் அதாவது இன்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.
இதனால் நேற்று போராட்டம் நடத்திய 9 ஆயிரம் ஆசிரியர்களில் சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications