குளிரும் மார்கழியில் சித்திரை போல கொதிக்கும் வெப்பம்- காரணம் என்ன?
தமிழகத்தில் வானம் மேகமூட்ட மின்றி தெளிவாக காணப்படுவதால் பல்வேறு நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: பங்குனி, சித்திரை போல மார்கழியிலேயே வெப்பம் தகிக்கிறது. கோடை தொடங்குவதற்கு முன்பே இந்த அளவுக்கு வெப்பம் அதிகரிப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக் காலம் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், வானம் தெளிவாக மேகமூட்டமின்றி காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

வெப்பநிலை
கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி யுள்ளது. கன்னியாகுமரியில் 33 டிகிரி, மதுரையில் 32 டிகிரி, கோவை, பாளையங்கோட்டை, பரங்கிப் பேட்டை, திருச்சியில் 31 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

குளிரும் வெப்பமும்
சென்னை, தஞ்சாவூர், பாம்பன், புதுச்சேரி ஆகிய நகரங்களில் தலா 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் பகலில் வெப்பம் இரவில் கடுங்குளிர் என வாட்டி வதைப்பதால் பலருக்கும் காய்ச்சல், உடல்வலிகள் ஏற்படுவதால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

தெளிவான வானம்
மார்கழியில் ஏன் இப்படி வெப்பம் என்று கேட்டதற்கு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தற்போது வங்கக் கடலில் தமிழக கடலோரப் பகுதிக்கு அருகே எந்த காற்றழுத்தமோ, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியோ இல்லை. அதனால் தமிழக வான் பகுதியில் மேகக் கூட்டங்கள் உருவாகாமல் தெளிவாக காட்சியளிக்கிறது என்று கூறியுள்ளனர். இதனால் சூரியனிடமிருந்து வரும் வெப்பக் கதிர்கள் நேரடியாக பூமியைத் தாக்குகிறது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றம்
குளிரும் மார்கழியில் கோடை போல வெப்பம் சுட்டெரிப்பதால் நோய் தாக்குதலும் ஏற்பட்டு வருகிறது. ஒருபக்கம் வறட்சி வாட்டி வதைக்க, சென்னை சுற்றுவட்டார நகரங்களில் வர்தா புயலின் பாதிப்பு இன்னமும் நீடிக்கிறது. வறண்ட வானிலையால் பொங்கல் பண்டிகை நாட்களில் வெயில் வெளுத்து வாங்கும் என்பது மட்டும் உண்மை.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications