வழக்கறிஞர் சட்டத் திருத்தம் தாற்காலிகமாக நிறுத்தி வைப்பு: சென்னை ஹைகோர்ட்
சென்னை: புதிய சட்டத்திருத்தத்தின் கீழ் வழக்கறிஞர்கள் மீதான சட்டத் திருத்தம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வழக்கறிஞர்கள், போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களை தடை செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி புதிய சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது.

இந்த புதிய சட்டத்திருத்தத்திற்கு வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வழக்கறிஞர் சட்டத் திருத்தம் உடனடியாக அமல்படுத்தப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நீதிபதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து நீதிபதிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 25 நீதிபதிகள் கலந்து கொண்டு வழக்கறிஞர்கள் சட்ட திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் 3 நீதிபதிகள் இருந்த விதிக்குழு மாற்றி அமைக்கப்பட்டு, புதிதாக நீதிபதிகள் நாகமுத்து, எம்.எம் சுந்தரேஷ், மணிகுமார், பி.என்.பிரகாஷ், ராஜூவ் சக்தேர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த குழுவிடம் வழக்கறிஞர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும், விதிக் குழுவானது, சட்ட திருத்ததின் மீது முடிவெடுக்கும் வரை வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது பழைய விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications