தொடரும் பேருந்து விபத்துகள்.. முடிவிற்கு வராத போராட்டம்.. தமிழக அரசு முகம் காட்டுமா?

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் மொத்தமும் முடங்கி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுக்க பேருந்து நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பேருந்து நிறுத்தம் காரணமாக தற்காலிக ஓட்டுனர்கள் பலர் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இதனால் ஆங்காங்கே பேருந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் மொத்தமும் முடங்கி இருக்கிறது. சென்னையில் தொடங்கி குமரி வரை நடக்கும் இந்த போராட்டத்தில் இன்னும் சரியான தீர்வு எட்டப்படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Temporary bus drivers make accident due to Bus strike in TN

இந்த போராட்டம் இன்றும் நான்காவது நாளாக தொடர்கிறது. தற்போது தமிழகத்தில் நகரம் முழுக்க 80% பேருந்துகள் இயங்கவில்லை. மேலும் கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் 90% பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் இந்த போராட்டத்தை செய்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுக்க தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த தற்காலிக போக்குவரத்து பணியாளர்களால் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ஆவடி பேருந்து நிலையத்தில் தற்காலிக ஓட்டுநர் ஒருவர் பேருந்தை சுவற்றில் மோதி விபத்து ஏற்படுத்தினார். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற பேருந்தை ஓட்டிய தற்காலிக ஓட்டுநர் ஒருவர் பேருந்தை பள்ளத்தில் இறக்கி விபத்து ஏற்படுத்தினார். இதனால் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+