தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.. ஆகஸ்ட் 7 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லீவ்!
தென்காசி: வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.
தென்காசி சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு அனைத்துக் கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களுக்கு வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டதில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா 07.08.2025 வியாழன் அன்று நடைபெற இருப்பதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. தென்காசி மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்டுள்ள விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் (23.08.2025) சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications