அதிமுக கோஷ்டிகளிடையே வன்முறை வெடிக்கும் அபாயம்.. சசியை சந்திக்கும் தினகரன்!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்ற தினகரன் தரப்பு முனைப்புடன் இருக்கும் நிலையில் இதைத் தடுக்க எடப்பாடி தரப்பு தடாலடியில் இறங்க உள்ளது.
அதிமுக கோஷ்டிகள் இதுவரை கருத்துகளால் மோதிக் கொண்டிருந்தன. இப்போது நேருக்கு நேர் மோதும் நிலை உருவாகி உள்ளது.

தினகரன் திட்டம்
அதிமுக மாவட்ட நிர்வாகிகளை வரும் 5-ந் தேதியன்று சென்னைக்கு வர உத்தரவிட்டுள்ளார் துணைப் பொதுச்செயலர் பொறுப்பில் உள்ள தினகரன். இதன் மூலம் அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்ற தினகரன் முயற்சிப்பது உறுதியானது.

எடப்பாடி தரப்பு உறுதி
தினகரன் வசம் மீண்டும் அதிமுக சென்றுவிடக் கூடாது என்பதில் எடப்பாடி தரப்பு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக கோட்டையிலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் அடுத்தடுத்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

தினகரன் கைது?
தினகரனை அதிமுக அலுவலகத்துக்குள் நுழையவிடாமல் தடுப்பது; அதையும் மீறினால் கைது செய்வது என அடுத்த பாய்ச்சலுக்கு எடப்பாடி தரப்பு தயாராகிவிட்டது. இந்நிலையில்தான் சசிகலாவை தினகரன் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்னதான் நடக்கும்?
எடப்பாடி அரசை கவிழ்க்கும் முயற்சியில் சசிகலா குடும்பம் இறங்குமா? இன்னொரு கூவத்தூர் அரங்கேறுமா? சசிகலா குடும்பத்துக்கு எதிராக சாட்டையை சுழற்றுவாரா எடப்பாடி? என ஏகப்பட்ட கேள்விகளுடன் தமிழக அரசியல் களம் பரபரக்க காத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications