பாஜக ஆதரவுடன் ஜெ. பிரதமரானாலும் மகிழ்ச்சிதான்: தா. பாண்டியன்

தி இந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் வியூகம் என்ன?
தேசிய அளவில் கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதையொட்டிச் செயல்படுவோம். மாநில அளவில் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறோம்.
கேள்வி: மோடி அலை உண்மையா? எடுபடுமா?
பதில்: மோடி ஒரு ரப்பர் பலூன். ஊடகங்கள்தான் அதைப் பறக்க விடுகின்றன. தேர்தலுக்குப் பின் காற்று இறங்கி, ரப்பர் கிழிசலாக அது கீழே விழுந்து கிடப்பதைப் பார்ப்பீர்கள்.
கேள்வி: ஜெயலலிதாவின் பிரதமர் கனவு?
பதில்: 3வது அணியின் சார்பில் ஜெயலலிதா பிரதமரானால், தமிழ்நாட்டுக்கு நல்ல செய்திதானே? நடக்கட்டும்.
கேள்வி: நீங்கள் 3வது அணியை மையமாக வைத்து யோசிக்கிறீர்கள். ஆனால், மோடி பிரதமராக முடியாத சூழலில் பா.ஜ.க. ஆதரவோடு ஜெயலலிதாவைப் பிரதமர் பதவியை நோக்கி நகர்த்தும் வியூகமும் டெல்லியில் அடிபடுகிறதே?
பதில்: சந்தோஷம் என்று போட்டுக்கொள்ளுங்கள். ஜெயலலிதா எப்படிப் பிரதமரானாலும் சந்தோஷம்தான்!
இவ்வாறு அந்த பேட்டியில் தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications