ஊழல் சொத்து பறிமுதல் சாத்தியமில்லை- கம்யூனிஸ்டுகள் கிங்மேக்கரா இருக்க கூடாது: 'கலகக் குரல்' தா.பா.
திருச்சி: ஊழல் செய்தோரின் சொத்துகளை பறிமுதல் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று; கம்யூனிஸ்டுகள் கிங்காகவோ கிங் மேக்கராகவோ இருக்க கூடாது; இருக்கவும் முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கலகக் குரல் எழுப்பியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை உருவாக்கியது முதலே கடும் எதிர்ப்பை அவ்வப்போது பதிவு செய்து வருபவர் இ.கம்யூ. மூத்த தலைவர் தா. பாண்டியன். இந்த கூட்டியக்கம், மக்கள் நலக் கூட்டணியானபோதும் கலகக் குரலை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தா. பாண்டியன், ஆட்சிக்கு வந்தால் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வோம் (வைகோ வாக்குறுதி) என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
வெற்றிகரமான கூட்டணிக்காக சில சமரசங்களை செய்து கொள்வதில் தவறில்லை. ஆனால் கம்யூனிஸ்டுகள் என்போர் கிங்காகவோ கிங்மேக்கராகவோ இருக்க கூடாது என்பதுதான் என் கருத்து. எந்த ஒரு கருத்து கணிப்பையும் நான் நம்பவில்லை. மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்போம் என்றார்.
ஆட்சிக்கு வந்தால் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வோம் என்று மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தொடர்ந்து பேசிவருகிறார். ஆனால் அது சாத்தியமே இல்லை என்று தா. பாண்டியன் பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் கம்யூனிஸ்டுகளை கிங் மேக்கராக சித்தரித்து விஜயகாந்த் பேசியிருந்தார். அதற்கும் இப்போது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் தா.பா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications