அதிமுக கோட்டை ஆர்கே நகரில் திமுக வெல்ல முடியாது... தம்பிதுரை என்ன சொல்ல வராரு!
2ஜி தீர்ப்பில் திமுகவை மக்கள் நம்பவில்லை என்பது ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார்.
சென்னை : அதிமுக கோட்டையான ஆர்கே நகரில் திமுகவால் வெல்லவே முடியாது என்பதைத் தான் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக லோக்சபா துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை கூறியதாவது : 2ஜி விவகாரத்தில் வெளிவந்த தீர்ப்பு கூட திமுகவிற்கு கைகொடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. 2ஜி விவகாரத்தில் திமுக ஊழல் செய்திருக்கிறது என்பது தான் மக்களின் தீர்ப்பு.
ஜெயலலிதாவின் கோட்டையான ஆர்கே நகரில் திமுகவால் எப்போதுமே வெற்றி பெற முடியாது என்பதைத் தான் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக தம்பிதுரை தெரிவித்துள்ளார். ஆர்கே நகரில் அதிமுகவைத் தவிர வேறு யாராலும் வெல்ல முடியாது என்கிற ரீதியில் தம்பிதுரை பேசி இருப்பதை என்ன அர்த்தத்தில் எடுத்துக் கொள்வது தொடக்கத்தில் இருந்தே சசிகலா அணிக்கு ஆதரவாக பேசி வரும் தம்பிதுரை தேர்தல் முடிவுகள் குறித்து இத்தகைய கருத்தை கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.