ஆர்.கே.நகரில் பணம் கொடுத்தது "அதிமுகவினர்"தான்.. ஆனால் அது நாங்கள் அல்ல... தம்பிதுரை மழுப்பல் பேச்சு
ஆர்கே நகரில் அதிமுகவினர் பணம் கொடுக்கவில்லை என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக கரை வேட்டியை கட்டிக் கொண்டு மர்மநபர்கள் பணம் விநியோகம் செய்வதாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மழுப்பலான பதிலை தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகரில் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் இங்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக அதிமுக மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

பணப்பட்டுவாடா செய்ய ரூ.100 கோடி பட்ஜெட் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவற்றுள் 80 சதவீதம் பணம் விநியோகம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவுடன் அரசியல் கட்சியினர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் பணப்பட்டுவாடா தொடர்பாக ஆளும் கட்சியினர் மீதும் தினகரன் அணியினர் மீதும் புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.
பத்ராவுடனான ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் தம்பிதுரை பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், ஆர்கே நகரில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்யவில்லை. அதிமுகவினரின் கரைவேட்டியை கட்டிக் கொண்டு மர்ம நபர்கள் இதுபோன்ற விஷமத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தம்பிதுரை குற்றம்சாட்டினார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications