நதி நீரை இணைக்க காங்கிரசிடம் கேட்க வேண்டியதுதானே.. மோடியிடம் ஏன் கேட்க வேண்டும்.. தமிழிசை ஆவேசம்
நதி நீரை இணைக்க காங்கிரஸ் கட்சியிடம் கேட்காமல் பாஜகவிடம் ஏன் கேட்க வேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவனியாபுரம்: நதி நீர் இணைப்பு குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியிடம் ஏன் கேட்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
நதி நீரை இணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதுகுறித்து தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, செங்குன்றம் அருகே போதைப் பொருள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அமைச்சர், டி.ஜி.பி.க்கள் மீது வருமான வரித்துறை புகார் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், திருச்சி விமான நிலையத்தில் 75 கோடி ரூபாய் மதிப்பில் போதை பொருள் பிடிபட்டது. சிறுவர்கள் கூட போதை பழக்கத்தால் சீரழிந்து வருகின்றனர். போதை பொருட்கள் ஒழிப்பில் முதல்வர் பழனிச்சாமி கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழிசை கேட்டுக் கொண்டார்.
நதி நீர் இணைப்பு குறித்து இப்போது பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள ஸ்டாலின் 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியிடம் ஏன் கேட்கவில்லை என்று தமிழிசை கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications