எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு... நிதி அமைச்சராகிறாரா தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச் செல்வன்?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று தலைமை செயலகத்தில் எம்எல்ஏ தங்கதமிழ்ச் செல்வன் சந்தித்து பேசினார்.
சென்னை: தினகரன் ஆதரவாளரான ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்க தமிழ்ச் செல்வன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று சந்தித்து பேசினார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இதைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க சசிகலா அணியை சேர்ந்த 122 எம்எல்ஏ-க்களும் கூவத்தூர் சொகுசு விடுதியில் சிறைபிடிக்கப்பட்டனர்.
அப்போது பணம், தங்கம், அமைச்சர் பதவி என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து எம்எல்ஏ-க்கள் தொகுதி பக்கமே செல்லாமல் கூவத்தூரில் குதூகலமாக இருந்தனர். ஒரு வழியாக பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.

இரட்டை இலைக்கு லஞ்சம்
இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவும், இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனும் சிறை சென்றார். இதனால் எம்எல்ஏ-க்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருந்தது.

அதிமுக இணைப்பு
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்று முடிவு செய்தனர். ஆனால் டிடிவி தினகரனை ஒதுக்கி வைக்கும் முடிவுக்கு தினகரன் ஆதரவாளர்களான தங்கதமிழ்ச் செல்வன், கதிர்காமம், வெற்றி வேல் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தனித்தனி அணியாக...
தோப்பு வெங்காடசலம், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அடங்கிய 10 எம்எல்ஏ-க்களும், இன்னம் பிற 15 எம்எல்ஏ-க்களும் தனி அணியாக செயல்பட்டு கூவத்தூர் வாக்குறுதிகள் குறித்து விவாதித்தனர். இன்னும் நிறைவேற்றப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

தினகரனுக்கு ஆதரவு பெருக்கம்
இந்நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரனுக்கு ஆதரவு பெருகி வருவதால் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏ-க்களை சமரசப்படுத்தும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார். தினகரன் வெளியே வருவதற்கு முன்னதாகவே சட்டசபை கூட்டினால் பெரும்பான்மை பலத்தை இழந்து விடுவோம் என்ற பயத்தின் காரணமாக தோப்பு கோஷ்டி உள்ளிட்டோரை முதல்வர் சமாதானம் செய்தார்.

தங்கதமிழ்ச்செல்வன் சந்திப்பு
தற்போது தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச் செல்வன் சந்தித்தார். அப்போது அவர் கேட்டு வரும் நிதி அமைச்சர் பதவி குறித்தும் விவாத்திருக்கலாம் என்று தெரிகிறது. சட்டசபை கூடவுள்ள நிலையில் எம்எல்ஏ-க்களை முதல்வர் சமாதானப்படுத்துவதாகவே கருதப்படுகிறது.
-
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications