வெளியில போய்ட்டு மறுபடியும் வந்தா பதவி தர மாட்டோம்.. தங்கபாலு வார்னிங்!
சேலம்: காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி மீண்டும் திரும்பி வருவோருக்கு பதவிகள் எதுவும் தரப்பட மாட்டாது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
வாசன் வெளியேறியதைத் தொடர்ந்து காங்கிரஸ் கோஷ்டிகள் சுறுசுறுப்பாகியுள்ளன. புதிய தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கட்சியைப் பலப்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் தலைவர் தங்கபாலு, சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
காங்கிரஸ் கட்சியை யாராலும் பிளவுப்படுத்த முடியாது. சில நேரங்களில் சிலர் வருவார்கள், சிலர் போவார்கள், அதுபோல் தான் இப்போது நடந்துள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் காங்கிரசில் உள்ளனர். தமிழகத்தில் உண்மையான காங்கிரஸ் நாம் இருக்கும் இடம் தான்.
இனி காங்கிரஸ் விசுவாசிகளுக்குத்தான் பதவி. அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்பவர்களுக்குத்தான் பதவி. வெளியில் சென்று மீண்டும் வருபவர்களுக்கு பதவி கிடையாது. கட்சிக்கு உழைப்பவர்களுக்கு உரிய மரியாதையை பெற்று தருவோம்.
தமிழக மக்களின் எதிர்காலத்திற்கு தேவையான ஆக்கபூர்வமான பணிகளில் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபடுவார்கள். தமிழக மக்களின் வாழ்வாதாரம் உயர பாடுபடுவோம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு உழைக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி. தமிழகத்தில் மீண்டும் காமராஜ் ஆட்சி ஏற்பட உழைப்போம் என்றார் தங்கபாலு.
-
திமுக ஏஜெண்ட் செல்வப் பெருந்தகை.. காங்கிரஸில் வெடித்த கலகம்! டெல்லிக்கு டிக்கெட் போடும் கதர் தலைகள்! -
ரூ.4000 + ரூ.2000.. தவெக விஜய் சட்டென சொன்ன சர்ப்ரைஸ் வாக்குறுதி.. யாருக்கெல்லாம் வழங்கப்படும்? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications