ரூ.75,000 லஞ்சம் வாங்கிய தஞ்சை மாநகராட்சி ஆணையர் கைது - வீட்டில் ரெய்டு
காலி மனைக்கு வரிக்குறைப்பு செய்ய ரூ.75,000 லஞ்சம் வாங்கிய தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் வரதராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர்: வரிகுறைப்பு செய்வதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் வரதராஜ் ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார். வரதராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக வரதராஜன் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கீழவஸ்தாசாவடி பகுதியைச் சேர்ந்த ஒய்வு பெற்ற ஊழியர் சம்பந்தம் என்பவருக்கு தஞ்சாவூரின் மையப்பகுதியில் 15 ஆயிரம் சதுர அடியில் காலி மனை உள்ளது.

இந்த மனைக்கு வரி செலுத்துவதற்காக பலமுறை மாநகராட்சி அலுவலகத்திற்கு சம்பந்தம் சென்றுள்ளார். ஆனால் அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் தொடர்ந்து அலைக்கழித்ததால் உரிய நேரத்தில் வரியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வரி செலுத்த உதவுமாறு இடைத்தரகர் நாகராஜ் என்பவரை அணுகி உள்ளார். ஆணையருக்கு ரூ. 75,000 லஞ்சம் கொடுத்தால் வரியை குறைத்து மதிப்பிட்டு தருவார் என நாகராஜன் சம்பந்தம் அவர்களிடம் கூறியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து சம்பந்தம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளார். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஆணையர் வரதராஜனுக்கு லஞ்சம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இடைத்தரகர், ஆணையர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தஞ்சை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை, பாதாள சாக்கடை பயன்பாட்டு கட்டணம் ஆகியவற்றை உடனே செலுத்த வேண்டும். இல்லையெனில் மாநகராட்சியால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடை உரிமம் ரத்து, நீதிமன்ற நடவடிக்கை ஆகியவை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் வரதராஜ் எச்சரித்திருந்தார்.
இதுவரை யார் யாரிடம் வரதராஜ் லஞ்சம் பெற்றுள்ளார் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆணையர் வரதராஜ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications