புயலுக்கு முன் ஏற்படும் அமைதியை உணர்கிறேன்... தங்கர் பச்சான்
Subscribe to Oneindia Tamil
சென்னை: புயலுக்கு முன் ஏற்படும் அமைதி நான் வாக்களித்த வாக்குச் சாவடியில் நிலவியது. மக்கள் மனங்கள் மாற்றம் ஏற்பட்டு விட்டதாக உணர்கிறேன் என்று பிரபல திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பேஸ்புக் பதிவு:
ஒரு குடிமகனாக முதல் கடமையாக வாக்களித்துவிட்டு வந்தேன்.புயலுக்கு முன் ஏற்படும் அமைதி அங்கு நிலவியது! மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக உணர்கிறேன்.

மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு மக்களையே விலை பேசிய கூட்டத்தை விரட்டவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.
நம் வாழ்வுதான் சீரழிந்தது! நம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளாவது நிம்மதியோடு தலைநிமிர்ந்து வாழட்டும்!! என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications