சுட்டெரிக்கும் வெயில்.. வேலூர், கரூர், மதுரை உள்பட 7 நகரங்களில் சதம்
தமிழகம் முழுவதும் பல நகரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. தருமபுரி, கரூர் உள்ளிட்ட 7 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேலாக வெயில் பதிவாகியுள்ளது.
சென்னை: சுட்டெரிக்கும் வெயில் தற்போது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் நூறு டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி 9 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூரில் 106 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 70 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை பதிவான வெப்பநிலை பாரன்ஹீட்டில்:
சென்னை - 99
கோவை - 98
கடலூர் - 93
தருமபுரி - 102
கரூர் -106
கன்னியாகுமரி - 95
மதுரை - 103
நாகை - 93
திருநெல்வேலி - 103
தஞ்சாவூர் - 84
சேலம் -101
காரைக்கால் - 92
திருச்சி - 104
தூத்துக்குடி - 93
கொடைக்கானல் - 70
வேலூர் - 105
புதுச்சேரி - 93












Click it and Unblock the Notifications