For Daily Alerts
Just In
பாதுகாப்பு தீவிரம்.. சென்னைக்கு துணை ராணுவம் வருகை!
கருணாநிதி உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ராஜாஜி ஹாலிற்கு வந்த ராணுவ உயர் அதிகாரிகள் தற்ப
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ராஜாஜி ஹாலிற்கு வந்த ராணுவ உயர் அதிகாரிகள் தற்போது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருணாநிதி மருத்துவமனையில் அனுமதித்த, முதல் நாளில் இருந்தே அலை கடல் என திரண்டு வரும் அவர் தொண்டர்களும் பொதுமக்களும் அனைவரும் அறிந்ததே அவர்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
அதில் அடுத்த கட்ட நடவடிக்கையாக துணைநிலை ராணுவத்தை சென்னைக்கு வரவழைத்து உள்ளனர்.இதனால் சென்னை என்னும் பதட்ட நிலையில் காணப்படுகிறது. இன்னும் எந்த தகவலும் திமுக தலைவர் கருணாநிதியை பற்றி உறுதியாக விளிவராத நிலையில் துணை நிலை ராணுவம் வந்திருப்பது மக்களை மேலும் கலக்கப்படுத்தி இருக்கிறது.
English summary
The government is taking various steps following the release of the Cauvery hospital report that the health of the artist is very worrying. The army high officials who came to Rajaji Hall are continuing their inspection work
Story first published: Tuesday, August 7, 2018, 18:40 [IST]