அம்மா வாங்க, அய்யா வாங்க.. 2 கூடை ஆதரவு வாங்கிக்கிட்டு போங்க: இது அழகிரி!

Subscribe to Oneindia Tamil

தேனி: மதிமுகவில் இருந்த பொன். முத்துராமலிங்கத்தை திமுகவுக்கு மீண்டும் அழைத்து வந்தது தான் நான் செய்த மிகப் பெரிய தவறு என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

கம்பத்தில் நடந்த திமுக நிர்வாகி இல்ல விழாவில் அழகிரி கலந்து கொண்டார். அப்போது அவரை காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம். ஆரூண் மற்றும் மதிமுக வேட்பாளர் அழகு சுந்தரம் ஆகியோர் சந்தித்து ஆதரவு கோரினார்கள். இருவருக்குமே ஆதரவு தெரிவித்தார். அழகிரி. பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

வைகோ

வைகோ

தேனி மக்களுக்காக வைகோ பாடுபட்டுள்ளார். பெரியாறு அணை விவகாரத்தில் அவர் பல்வேறு போராட்டங்கள் நடத்தினார். அதை எல்லாம் நம்பித் தான் மதிமுக தேனி தொகுதியில் போட்டியிடுகிறது.

ஆரூண்

ஆரூண்

ஜே.எம். ஆரூண் எம்.பி. இந்த தொகுதியில் இருந்து 2 முறை தேர்வு செய்யப்பட்டவர். இந்த தொகுதிக்காக சேவைகள் செய்துள்ளதால் அவர் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுக

திமுக

திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் ஏன் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்? அவருக்கு போட்டியிட என்ன தகுதி இருக்கிறது. அவருக்குள்ள ஒரேயொரு தகுதி, செய்த சாதனை கட்சி விட்டு கட்சி தாவுவது தான்.

பெரிய தவறு

பெரிய தவறு

நான் செய்த மிகப் பெரிய தவறு என்னவென்றால் மதிமுகவில் இருந்த பொன். முத்துராமலிங்கத்தை மீண்டும் திமுகவுக்கு அழைத்து வந்தது தான்.

மதிமுக

மதிமுக

வைகோ திமுகவில் இருந்து வெளியேற முக்கிய காரணமே பொன். முத்துராமலிங்கம் தான். வைகோவை ஏற்றிவிட்டு ஏற்றிவிட்டே அவரை தனிக்கட்சி துவங்க வைத்தார். பின்னர் வைகோவுக்கும் துரோகம் செய்து திமுகவில் சேர்ந்துவிட்டார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+