மாமா விட்டுவிடுங்கள் என கெஞ்சினான், ஆனாலும் தீர்த்துக்கட்டினேன்:சிறுவன் கொலையில் கள்ளக்காதலன் பகீர்
மாமா விட்டுவிடுங்கள் என ரித்திஷ் கெஞ்சினான் ஆனாலும் இரும்புக்கம்பியால் அடித்து தீர்த்துக்கட்டினேன் என கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: மாமா விட்டுவிடுங்கள் என ரித்திஷ் கெஞ்சினான் ஆனாலும் இரும்புக்கம்பியால் அடித்து தீர்த்துக்கட்டினேன் என கள்ளக்காதலன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு ரித்தீஷ் சாய் என்ற 9 வயது மகன் இருந்தான்.
மின்வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து வரும் மஞ்சுளாவுக்கு சேலையூரைச் சேர்ந்த நாகராஜ் என்பவருடன் கள்ளக்காதல் இருந்துவந்துள்ளது. இவர்கள் இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

கணவர் இல்லாத நேரத்தில்
கணவர் கார்த்திகேயன் இல்லாத நேரத்தில் மஞ்சுளா கள்ளக்காதலன் நாகராஜை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இருவரின் தனிமை சந்திப்பு குறித்து ரித்திஷ் தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

கள்ளக்காதலை மறுப்பு
இதனையறிந்த கார்த்திகேயன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை விட மறுத்து உறவை மேற்கொண்டுள்ளனர்.

சிறையில் அடைப்பு
இந்நிலையில் நாகராஜ் குறித்து கார்த்திகேயன் கடந்த ஜனவரி மாதம் எம்ஜிஆர் நகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

பொய் சொல்லி கடத்தல்
பின்னர் வெளியே வந்த நாகராஜ் தன்னை ஜெயிலுக்கு அனுப்பிய கார்த்திகேயனை பழிவாங்க திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் இரவு டியூஷனில் இருந்த ரித்திஷை, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் எனக்கூறி கடத்தி சென்றுள்ளார் நாகராஜ்.

சிறுவனை கொன்றது எப்படி?
சேலையூரில் உள்ள தனது வீட்டில் வைத்து சிறுவன் ரித்தீஷை மிக கொடூரமாக அவர் கொலை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட நாகராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனை கொன்றது எப்படி என விவரித்துள்ளார்.

பீர்பாட்டிலால் கழுத்து அறுப்பு
அதாவது ரித்தீஷை எப்படி கொலை செய்யலாம்? என்று யோசித்ததாகவும், அதன்படி காலியாக இருந்த பீர் பாட்டிலை உடைத்து ரித்தீஷை கீழே தள்ளி, அவனது கழுத்தை அறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மாமா விட்டுவிடுங்கள்
கழுத்து அறுபடவில்லை என்ற அவர், அப்போது ரித்தீஷ் மாமா.. மாமா, ‘என்னை விட்டுவிடுங்கள்' என்று கெஞ்சியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனாலும் தான் அவனை விடவில்லை என்றும் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் அவனது தலையில் ஓங்கி அடித்து தீர்த்து கட்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தாயின் கள்ளக்காதல்
மாமா விட்டுவிடுங்கள் என கெஞ்சிய சிறுவனை துடிக்க துடிக்க கொன்றதாக நாகராஜ் அளித்துள்ள வாக்குமூலம் போலீசாரை அதிர வைத்துள்ளது. தாயின் கள்ளக்காதலுக்கு 9 வயது மகன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications