திருமணமான ஒரே நாளில் புதுப்பெண் மீனா தூக்கிட்டு தற்கொலை-வாணியம்பாடியில் சோகம்
திருமணமான ஒரே நாளில் புதுப்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video

வாணியம்பாடி: திருமணமான மறுநாளே புதுப்பெண் மீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி நேதாஜி நகர் மருத்துவர் காலனியை சேர்ந்தவர் விநாயகம் என்பவரது மகள் மீனா, 20. இவருக்கும், குரிசிலாப்பட்டை சேர்ந்த நாதஸ்வர கலைஞர் கோவிந்தராஜ் 25 என்பவருக்கும் நேற்று முன்தினம் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. அத்துடன் சம்பிரதாயப்படி, தம்பதிகள் மணமகள் வீட்டிற்கும் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில், மாப்பிள்ளை கோவிந்தராஜ் நேற்று மாலை வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டார். அந்த நேரத்தில் மணப்பெண் மீனா அதே பகுதியில் உள்ள உறவினர் யுவராஜ் என்பவர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு யாரும் இல்லை என தெரிகிறது.
அப்போது மீனா திடீரென்று, யுவராஜ் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த நேரத்தில் குடும்பத்தினர் மீனாவை தேடி வந்தநிலையில், யுவராஜ் வீட்டில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வாணியம்பாடி போலீசார் விரைந்து வந்து
மீனாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஒரே நாளில் ஏன் மீனா தற்கொலை செய்துகொண்டார்? இந்த திருமணத்தில் அவருக்கு உடன்பாடு இல்லையா? வேறு யாரையாவது மீனா விரும்பினாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் திருமணமாகி ஒரே நாளில் 20 வயது இளம்பெண் இறந்த சம்பவம் வேலூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications