கிருஷ்ணகிரி: 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவர் - தலையில் படுகாயம்
கிருஷ்ணகிரியில் மாணவர் ஒருவர் கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாணவர் ஒருவர் கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அடுத்த அச்சமங்கலம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது பி.எஸ்.வி பாலிடெக்னிக் கல்லூரி. இந்த கல்லூரியில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் கிராமத்தை சேர்ந்த ராகுல் என்ற மாணவன் மூன்றாம் ஆண்டு டிப்ளோமா மெக்கானிக்கல் படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த ராகுல், கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து திடீரென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மூன்றாவது மாடியில் குதித்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து சக மாணவர்கள் காயமைந்த ராகுலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மாணவனின் தற்கொலை முயற்சியால் கல்லூரி வளாகமே பரபரப்படைந்தது. இதனை அடுத்து கல்லூரிக்கு வரும் ஞாயிற்றுக் கிழமை வரை 6 நாட்கள் விடுமுறை அளித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கந்திகுப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications