Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நினைத்துக்கூட பார்க்க முடியாத மிருகத்தனமான ஒரு குற்றமாகும்.. நிர்பயா வழக்கில் நீதிபதிகள்!

நினைத்து பார்க்க முடியாத சித்ரவதைகளை செய்து நிர்பயாவை கொன்றிருப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. சுமார் 15 நிமிடம் தீர்ப்பை வாசித்த நீதிபதிபகள் நினைத்துக்கூட பார்க்க முடியாத மிருகத்தனமான குற்றம் நிர்பயாவுக்கு இழைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு என்பதால் காலை முதலே நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. தீர்ப்பை வாசித்த போது அப்போது நீதிபதிகள் சில கருத்துக்களை வேதனையுடன் தெரிவித்தனர்.

The crime of is of inconceivable brutality: supreme court
  • அந்த குளிர்கால இரவு லேசாக நிர்பயாவுக்கு தெரியப்படுத்தியிருக்கும் அதுதான் அவரின் கொடூரமான கடைசி இரவு என்று.
  • குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட மாணவியையும் அவரது தோழனையும் சாகட்டும் என விட்டுச்சென்றனர்.
  • குற்றவாளிகள் அவரை கொள்ளையிட்டு பகிர்ந்துக் கொண்டனர்.
  • வக்கிர இன்பத்துக்காக அவள் ஒரு பொருளாக பயன்படுத்தப்பட்டாள்.
  • பிசாசு போன்று அவளது கவுரவத்துடன் விளையாடியுள்ளனர்.
  • இந்தக் குற்றம் சமூதாயத்தின் மீது உள்ள நம்பிக்கையை அழித்து விட்டது.
  • இது நினைத்துக்கூட பார்க்க முடியாத மிருகத்தனமான ஒரு குற்றமாகும்.
  • ஒரு இரும்புக் கம்பியால் பாதிக்கப்பட்டவரின் குடலை சேதப்படுத்தி, அவளின் உடைகளை கிழித்து மிருகத்தனமான பாலியல் வன்கொடுமை அரங்கேறியிருக்கிறது. இது அரிதிலும் அரிதானது.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+