For Daily Alerts
Just In
கோவை ஏரியாவில் மட்டும் பிற்பகலில் ரிலீசாகிறது புலி!
விஜய்யின் புலி படம் இன்று தமிழகத்தில் அனைத்து ஏரியாக்களிலும் சற்று தாமதமாக வெளியாகிவிட்டது. ஆனால் கோவை ஏரியாவில் மட்டும் இன்று பிற்பகலில் புலி வெளியாகிறது.
கோவை பகுதிக்கு புலி படத்தை விநியோகம் செய்வதில் ஏற்பட்டுள்ள நிதிப் பிரச்சினையைத் தீர்க்க பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். பகல் 12 மணிக்கு புலி காட்சிகள் ஆரம்பமாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் புலி இன்று காலை 9 மணிக்கு வெளியானது. சென்னையில் பிவிஆர், எஸ்எஸ்ஆர் பங்கஜம் உள்ளிட்ட அரங்குகள் 10 மணிக்கு படத்தைத் திரையிட்டன.
படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்கள் இருந்தாலும், விஜய் ரசிகர்கள் தளரவில்லை. படத்தைப் பார்க்க மிகுந்த உற்சாகத்துடன் காத்திருந்தனர்.
English summary
The first show of Puli in Kovai area will be screened at 12 Noon today.