திமுக வெற்றி பெற்றால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரணை நடத்தப்படும்: ஸ்டாலின் உறுதி
சென்னை: திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை திருவான்மியூர் அருகே உள்ள ராஜீவ்காந்தி திடலில் அதிமுக, பாமக, மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 5,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றார்.

அப்போது பேசிய ஸ்டாலின், வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது. அனைத்து தரப்பினரும் ஆட்சியை மாற்றிட வேண்டும். ஏற்றத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர். கடந்த நாலரை ஆண்டு கால ஆட்சியில் ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் நடைபெற வில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், சென்னையில் வெள்ளம் தானாக ஏற்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி முறையான அறிவிப்போடு திறக்கப்பட்டிருந்தால் வெள்ளம் ஏற்பட்டிருக்காது. வெள்ளம் குறித்து எல்லாக் கட்சித் தலைவர்களும் ஆதாரத்தோடு சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் அதிமுக அரசு அதை பற்றி கண்டுகொள்ளவில்லை.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், முறைகேடுகள் குறித்த விசாரணையில் இருந்து யாரும் தப்பமுடியாது என தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கதை சொல்லுவது போன்று தி.மு.க.வை பற்றி ஜெயலலிதா பேசி உள்ளதாக குறிப்பிட்ட ஸ்டாலின், அவருக்கு தைரியம் இருந்தால் திமுக என்ற பெயரை சொல்லி கதை சொல்லியிருக்கலாமே என கேள்வி எழுப்பினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications