ஜல்லிக்கட்டு போராட்டம்.. போலீஸ் தாக்குதலில் பார்வையிழந்த வாலிபர்.. ரூ.50 லட்சம் கேட்டு தாய் வழக்கு
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறை வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதில் பார்வையிழந்தவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்க வேண்டும் என்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்ன மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி அற வழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 8 நாள்கள் நடைபெற்ற இப்போராட்டத்தில், முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தமிழக சட்டசபையில் அவசர சட்டம் பிறப்பிக்க அனுமதி கோரினார்.

சென்னையில் கலவரம்
அதற்கு அனுமதி கிடைத்து அவசர பிறப்பிக்க இருந்த நிலையில் மெரினாவில் கூடியிருந்த மாணவர்களை போலீஸார் கலைந்து போக வலியுறுத்தினர். இந்நிலையில் ஜன.23-ஆம் தேதி சென்னையில் திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் நடந்தது.

காவல்துறை தாக்குதல்
அப்போது கலவரக்காரர்களை கலைப்பதற்காக போலீஸார் கண்ணீர் புகை வீசுதல் உள்ளிட்ட பல்வேறு உத்திகளை கையாண்டனர். அங்கிருந்து குடியிருப்புகளுக்குள் இருந்த சிலரையும் போலீஸார் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

ரூ.50 லட்சம் இழப்பீடு
அத்தகைய தாக்குதலின்போது கலங்கரை விளக்கம் அருகே இருந்த வீட்டில் போலீஸார் தாக்குதல் நடத்தியதில் கார்த்திக் என்பவர் பார்வையிழந்தார். காவல்துறை தாக்குதலால் பார்வையிழந்த தனது மகனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கூறி அவரது தாய் விமலா சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

காவலர்கள் மீது நடவடிக்கை
அந்த மனுவில், தனது மகனுக்கு சிகிச்சை அளிக்கவும், தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். அப்போது காவல் துறையின் தாக்குதல் விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications