பறிமுதலாகும் ஜெ, சசி சொத்துக்கள் வெறும் ஜுஜுபியாம்.. அபராதத் தொகையை வசூலிக்க போதாதாம்!
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் அபராதத் தொகைக்கு ஈடானது அல்ல என்று தெரிய வந்துள்ளது.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தமிழக அரசால் பறிமுதல் செய்யப்படவுள்ள ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரின் சொத்துகள் அபராதத் தொகைக்கு ஈடானது அல்ல என்பதால் அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அபராதத்துக்கு ஈடு கட்ட நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேபோல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைதண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் சசிகலா உள்ளிட்ட 3 பேர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதால் அவரது அபராதத் தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் அபராதத் தொகையை வசூலிக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சொந்தமான தமிழகத்தில் உள்ள 68 சொத்துகள் அடையாளம் காணப்பட்டு விட்டது.
இவற்றை பறிமுதல் செய்ய தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் தமிழகத்தை சேர்ந்த 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகளை பறிமுதல் செய்தாலும் அது அபராதத் தொகைக்கு ஈடானது அல்ல. இதனால் அவர்கள் 3 பேரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை அபராதத்துக்கு ஈடுகட்ட நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications