கன்னடத்தில் பேசு... இரக்கமே இல்லாமல் சரமாரியாக அடிக்கப்பட்ட தமிழ் முதியவர்- வீடியோ
சென்னை: கன்னடத்தில் பேசச்சொல்லி தமிழக ஓட்டுனர் ஒருவரை முதியவர் என்று பாராமல் கன்னட அமைப்பினர் கன்னத்தில் மாறி மாறி தாக்கும் அதிர்ச்சி வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் தமிழக இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ராமேஸ்வரத்தில் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர். கர்நாடகா டிரைவரையும் தாக்கினர். சென்னையிலும் கர்நாடகா ஹோட்டல் மீது தாக்குதல் நடைபெற்றது.
தமிழகத்திற்கு விநாடிக்கு 12000 கனஅடி வீதம் 20ம் தேதிவரை தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து கர்நாடகாவில் கலவரம் தீவிரமடைந்தது.
கன்னட அமைப்பினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எல்லைகளில் குழுவாக பிரிந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர் தமிழக வாகனங்களை, தமிழக ஓட்டுனர்களை தாக்கி வருகின்றனர்.
கர்நாடக எல்லைப் பகுதியில் தமிழக ஓட்டுனர் ஒருவரை முதியவர் என்றும் பாராமல் கன்னட அமைப்பினர் தாக்கும் வீடியோ பதிவு வெளியாகியுள்ளது. அந்த முதியவர் கெஞ்சியும் அவரை தொடர்ந்து கன்னடர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. டிரைவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பி வந்தனர். இந்தநிலையில் கன்னட அமைப்பினரிடம் கெஞ்சும் வயதான டிரைவரை தாக்கி மீண்டும் பிரச்சினையை கிளப்பியுள்ளனர் கன்னட அமைப்பினர்.












Click it and Unblock the Notifications