For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவதூறு வழக்கில் விஜயகாந்த் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு!

ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய வழக்கில் விஜயகாந்த் ஆஜராகாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிப்புத்தூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஏப்ரல் 13 ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜராக ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012 -ம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கிறிஞர் மங்களசாமி வழக்கு தொடர்ந்தார்.

The Srivilliputhur Court send summon to vijayakanth

இந்த வழக்கு விசாரணைக்கு மார்ச் 2-ம் தேதி விஜயகாந்த் நேரில் கண்டிப்பாக ஆஜராக கடந்த டிசம்பர் 22-ம் தேதி நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் உடல் நலம் சரியில்லாததால் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சிவக்குமார், ஏப்ரல் 13-ம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினம் விஜயகாந்த் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

English summary
The Srivilliputhur Court directed DMDK leader Vijayakanth to appear court on april 13th connection with a defamation case filed by the state government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X