சலாம் கலாம்.. கை தட்டி பாராட்டிய கைப்.. எதற்காக, ஏன்...?
ராமேஸ்வரம் கோயிலில் சிலைகளிடையே அப்துல்கலாம் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்: நாட்டை பற்றியும், எதிர்காலம் குறித்தும் இளைஞர்களுக்கு ஏராளமான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், வழங்கியவர் டாக்டர் அப்துல்கலாம்.
யார்மீதும் இல்லாத அபரிமித நம்பிக்கையை இளைஞர்கள் மீது வைத்து, அவர்களிடம் தனது தேசம் குறித்த கனவினையும் நிறைவேற்ற சொல்லிட்டு சென்றனர்.

பொன்மொழிகளே ஊன்றுகோல்
இளைஞர்களும், மாணவர்களும் தடுமாறி விழும்போதெல்லாம் அவரது பொன்மொழிகளே ஊன்றுகோலாக அவர்களை இன்றுவரைதாங்கி பிடித்து வருகிறது.. விஞ்ஞானி, ஜனாதிபதியாக இருந்தும், சாதாரணமாகவும், இயல்பாகவும் நேசபூர்வமாகவும் மாணவர்களோடும் குழந்தைகளோடும் உரையாடும் அவரது உயர்ந்த இன்றுவரை பாராட்டுக்குரியதும், மகிழ்ச்சிக்குரியதும், வியப்புக்குரியதும் ஆகும். நேருவுக்குப் பிறகு அதிகம் குழந்தைகள் ரசித்த மாபெரும் தலைவன்.. அறிஞன்.. கலாம்!

மண்டபத்தில் சிலை
அவர் இறந்து வருடங்கள் கடந்தாலும், அவரை பற்றியோ அல்லது அவரை பற்றின செய்திகளையோ, நாம் பேசாமலும், நினைக்காமலும் நாட்களை கடத்த முடியாதுதான். அப்படிப்பட்ட செய்திகளில் ஒன்று தற்போது மிக விரைவாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அது என்னவென்றால், ராமேஸ்வரத்தில் உள்ள கோயில் மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ள அப்துல் கலாமின் சிலைதான். கோபுரத்தில் சிலைகளுக்கிடையே கலாம் சிலையையும் வைத்துள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

உண்மையான ஹீரோ
இந்த புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் முகமது கைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது இதன் கூடுதல் சிறப்பு. முகமது கைப், "இதனைப் பார்ப்பதற்கே அவ்வளவு அருமையாக உள்ளது. உண்மையான ஹீரோ. அனைவருக்கும் உத்வேகத்தை அளிப்பவர்" என்ற கருத்தினையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்காக பாராட்டுக்குள் குவிந்து வருகின்றன. அதற்கு பதிலளித்த பலரும், ''இதுதான் இந்தியா, தமிழராக இருப்பதற்கு பெருமை அடைகிறோம், தமிழகத்தில் மட்டுமே உண்மையான மதச்சார்பின்மை உள்ளது'' எனப் பலரும் பதிவிட்டுள்ளனர்.

கலாம் போல ஆகுமா?
கோபுர உச்சியையும் தாண்டி கலாமின் புகழ் நீண்டுகொண்டே போகும். இன்னும் பல காலம் கடந்தாலும், கல்லாக, சிலையாக, ஓவியமாக, புத்தகமாக, கலாம் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. எத்தனையோ குடியரசு தலைவர் வந்தாலும் அது கலாம் போல ஆகுமா என்ன?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications